TN RATION SHOP NEW UPDATE 2023 ரேஷன் கடைகளில் புதிய அறிவிப்பு இனிமேல் இதுவும் கிடைக்கும்!
TN RATION SHOP NEW UPDATE 2023 தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் அதை தொடர்ந்து இன்று முதல் வழங்கி வருகின்றனர் எனவே இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கருத்தில் கொண்டு இது அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்த கேழ்வரகு திட்டத்தை இன்று முதல் (03.05.2023) தொடங்க உள்ளனர்.
WEBSITE HOME PAGE:JOIN
நீலகிரியில் உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உருளைக்கிழங்குகள் எல்லாம் சரியாக தரம் பிரிக்கப்படுகிறதா என்பதை குறித்து கேட்டு தெரிந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் அவரே உருளைக் கிழங்குகளை தரம் பிரித்து பார்த்தார். இந்த செயல் தொழிளார்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
JOIN WHATSAPP GROUP: CLICK NOW
மேலும், புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன் அவர்கள், உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்று முதல் நீலகிரி & தருமபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கலுக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் கேழ்வரகு உற்பத்தியை அதிகப்படுத்தி அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.